தொடக்கம்

கைநிறையக் காசிருந்தால்
கண்ணிரண்டும் தெரிவதில்லை,
முன்னாலே நின்றாலும்
முகம்கூட மறந்துவிடும்,
பொல்லாத காலமடா
பொய்போடும் வேடமடா..

கையிருப்பு காலியாகி
கடன்காரனாகி
நடுரோட்டில் கடும்வெயிலில்
கொடும்பசியில்
கால்நடையாய் நடக்கும்போது
தொடங்குதடா-
ஞானம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Sep-19, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே