கவலைப்படாதே பெண்ணே

துள்ளி திரியும் பெண்ணே
பட்டாம்பூச்சிகளை பிடித்து
விளையாடி மகிழ்ந்திடும் வயதில்
பாலியல் வன்முறைக்கு ஆளாகாதே அன்று பாஞ்சாலியின் மானம் காக்க கண்ணன் ஓடி வந்தான் .
இன்று உன்னை காக்க யாருமில்லை " கவலைப்படாதே பெண்ணே
நெருப்பில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக
நீ கயவர்களின் பிடியில் சிக்காமல் , முண்டாசு கவியின் புதுமை பெண்ணாக புறப்படு பெண்ணே
வாட்ஸ் அப்பில் ஹாய் அனுப்பி மயக்குபவனை நம்பாதே கவனமாக இருந்திடு பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில் தான்.

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (20-Sep-19, 3:37 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
பார்வை : 68

மேலே