வானவில் ஏழு வண்ணத்தில் கோடு போடுது

மேகம் பொழிய
மழை ஒரு ராகம் பாடுது
அருவிகள் மலையில் ராக ஆலாபனை செய்யுது
நதியலைகள் எல்லாம் தாளம் போடுது
வானவில் ஏழு வண்ணத்தில் கோடு போடுது
சின்னஞ் சிறுசுகள் தூறலைக் கையிலேந்தி ஆட்டம் ஆடுது !
காதல் மழை பொழியும் இரண்டு கண்கள் கவிதை பாடுது !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-19, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1119

மேலே