மனிதன் மறக்கவில்லை ...
ஓர் அதிகாலை
தெருவில் ஒரே
கூச்சல் !
குழப்பம் !
இப்படியாகிப்போச்சே ?
பெண்கள் கூட்டம் ஆங்காங்கே !
வேக வேகமாக செல்லும்
ஆண்கள் !
யாரும் தொழிலுக்கு செல்லக்கூடாது !
நாம் தான் செய்தாக வேண்டும்
இளைஞர் கூட்டம் !
என்னவாக இருக்கும் ?
அடுத்த தெருவில்
ஒருவர் மரணம் !
வயது அறுபதுக்கு மேல் இருக்கும்
மனிதன் மறக்கவில்லை
மனிதாபிமானத்தை !
இன்றும் கிராமங்களில் !!!