அம்மா

ஓர்பத்து மாதங்கள் கருவறைக்குள் சுமந்தாயே
வேர்விட்ட மரமாக என்வாழ்வு சிறத்தற்காய்
கார்முகிலாய் வாழ்ந்தாயே கண்ணிமைபோல் காத்தாயே
பாருலகில் உனக்கீடாய் எவருமுண்டோ என்தாயே !


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (2-Nov-19, 2:27 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 1707

மேலே