வன்மமான எண்ணம்

விடிகின்றன பொழுதுகள் கதிரவன் ஒளியோடு
வெவ்வேறு சிந்தனைகள் ஒவ்வொறு நாளிளுமே
விந்தைமிகு நடவடிக்கைகள் என்றும் சூழ்ந்திடுதே
கொந்தும் பகையோடு உறவுகள் வலம்வருதே

நீந்தி நிறைவு காண நித்தமும் போராட்டம்
வற்றிய சிந்தனையால் வறுமை செழிக்கிறது
வளர் இளம் குழந்தை எல்லாம் வாடிய நிலையிலேயே
வன்மமான எண்ணம் நம்மை வாட்டத் துணிகிறது

இடறி அதனைத் தள்ளி எழுச்சிக் காணங்கால்
இருள் சூழ்ந்து உள்ளதாய் எதிர்காலம் தெரிகிறதே
பதராய் அறிவுள்ளோர் அறிவுரை பதறச் செய்கிறதே
பக்குவம் பட மனதை பழக்க வைப்பது சிரமமானதே

திறமையாய் செயல்பட்டதற்கு ஊறு கூறியக் கூட்டம்
திறனற்ற வார்த்தையால் விளிப்பது கோபம் தூண்டுதே
தின்மை மனத்தை தீச்சொற்கள் சிதையச் செய்யுதே
திரும்பும் திசை தோறும் யாவும் எதிரியாய் தெரியுதே

என்றாலும் தீரத்துடன் தோல்வியை எதிர்க்க துணிந்து
எக்காலாமும் ஏற்றங்காண எழிச்சியடைந்தேன்
எதிர்வரும் எதிரான எவையும் சிதறச் செய்ய
என் மனதைத் திடமாக்கிவிட்டேன் இனி ஏறுமே வாழ்க்கை.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Nov-19, 9:44 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே