புது உலகம் -என் கனவு

காலம் செய்யும் கோலம்
ஓர் ஆண்டு போய் மற்றோர்
ஆண்டு புத்தாண்டாய் பிறப்பது
காலத்தின் மேல் பயணிக்கும் நாம்
வருகிறோம் போகிறோம்
இப்படித்தான் பிறந்து வளர்ந்து
மேன்மையடைந்தான் இவன்
இவன் வாழ்ந்ததில் இவனுக்கு மட்டுமா
மேன்மை .... இவ்வுலகமல்லவோ
மேன்மையடைந்தது என்று
மக்கள் கூறி வாழ ஒவ்வோர் மனிதனும்
முயன்றால் ..... இவ்வுலகில்
நல்லோர் ஆன்மாக்களே நிறைந்திருக்கும்
கண்ணனாய், புத்தனாய், ஏசுவாய்
பரமஹம்சராய், விவேகானந்தராய்......
இன்னும் இவர்களாய்.......
பின் என்ன .... மாசிலா உலகாகிவிடும்
மண்.... விண்ணாகிவிட
விண்ணோர் மண்ணைக்கண்டு வியக்க
மண்ணை நோக்கி வந்திடுவார்.....

புத்தாண்டே இப்படி நல்மக்கள்
மேன்மக்கள் நாட்டில் பிறந்து
வளர்ந்தோங்கி வாழ வழி வகுப்பாயே
இனி வரும் ஆண்டுகளாய்.....

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (1-Jan-20, 3:30 pm)
பார்வை : 146

மேலே