வாழ்க்கை ஒரு

வாழ்க்கை
போக எண்ணி நடந்தால்
பாதை மாறிகொண்டே
இருக்கும்...
மாறியதை நாம் ஏற்க
முயல வேறோன்று
நம்மை திசை திருப்பும்...
இரவுக்கு பகல்
வரும் என்பதை
கஷ்டத்தின் பின்
இலகு இருப்பதை
ஏற்க மறுக்கும்...
தவறவிடும் விடயங்கள்.
வாட்டி எடுக்கும்
அர்த்தம் உணரும் வரை...
வாழ்க்கை ஒரு
விசித்திரம் புரிந்து
கொண்டால்...
ரசித்து வாழ்ந்தால்
துன்பம் வந்தால்
துவண்டு போகாமல்
முன்னோக்கி நடக்கலாம்
ஆர்வத்துடனே...

எழுதியவர் : (3-Jan-20, 1:22 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : vaazhkkai oru
பார்வை : 91

மேலே