பார்வை
உன்னைப் பார்த்தேன்
உன் கண்ணோடு என் கண்
சேர்வதெப்போதோ என்று
எண்ணி இருக்கையிலே
என் எண்ணம் எப்படித்தான்
உன்னை எட்டியதோ தெரியலையே
உன் இமைகள் எனைப் பார்த்து
ஒரு மலர்போல் மூடி திறக்க
உன் விழிப் பார்வை எந்தன்
நெஞ்சை தைத்ததே காமன்
மலர் அம்பாய், 'காதல், காதல்'
என்ற மெல்லிய வார்த்தையும்
சேர்ந்து இசைக்க