பயம் சூழ் நல்லுலகம்

கண்ணுக்கு புலப்படாதவன் எதிரியோ?
கடவுளாகவும் இருக்கலாம்.....
துன்பத்தை தருபவன் எதிரி அல்லாமல்?
தண்டனை தருபவன் கடவுள் அன்றி?

பாவம், சாபம், படிப்பினை.... கர்மவினை......
யார் சொல்லி புரிய வைப்பர் இதனை?
புரிந்து கொண்டால் யார் மதிப்பர் இறையதனை...

மக்கள் மாக்களாகி போகும் காலம்,
இயற்கையை ஒழிக்க உய்யுமோ உலகம்,
செவிப்பறையின் மீது விழுந்ததொரு ஒரு அறை...
ஈரேழு தலைமுறைக்கும் மறவாத மரணஅடி.

கடவுளை நம்பு நாத்திகனாய் நீ இருந்தால்,
இயற்கையை மதி நீ ஆத்திகனாய் இருந்தாலும்....

ஒரு கிருமி போதும் உலகழிக்க என்றால் .....
உலகாளும் மனிதா...நில்.
முற்றாய் நீ உணர்ந்துகொள்.....
கிருமியினும் கீழேயே உன் எண்ணமும் ஆற்றலுமென்று....

எழுதியவர் : செந்ஜென் (23-Mar-20, 5:08 pm)
சேர்த்தது : செந்ஜென்
பார்வை : 81

மேலே