தங்கச்சி😍--------இஷான்

மண்டையில குட்டு போட்டு
நீ மாமரத்துகுள்ள ஒளிஞ்சி போன...
தெரியாமலேயே நான் வந்து
கிள்ளு ஒன்னு தந்தனே
ஞாபகம் இருக்கா?

ஆசையா ஐந்து ரூபா
ஐஸ்பழம் கேட்டு அடம்புடிச்ச...
என்னோட உண்டியல்ல
உடைச்சி வாங்கி தந்தனே
மறந்து போச்சா?

கூட்டமா புளியாங்கொட்ட
விளையாடினோம் நீ
தோத்துப் போய் கத்தி நிக்க...
நாலு புளியாங்கொட்ட கடன் தந்தனே
நினைவு இருக்கா?

அசந்து நல்லா தூங்கிப்
போய் குறட்ட விட்டு இருந்தன்
முழு வாளி தண்ணிய ஊத்திகிட்டு நீபறக்க
நான் ஓடி வந்து கீழ விழுந்து கிடக்க..
நீ கிறுக்கு சிரிப்பு சிரிச்சியே மறக்கலாமா?

தீடீர் என்னு நீ வளர்ந்துட்ட
என்னோட பேசுறதயும் குறைச்சிட்ட...
நீ மாறிட்டியா இல்ல நான் தான் மாறலயா?

அப்பதான் புரிஞ்சிகிட்டன்
இது பருவமழையோட காத்து...
அத நீ வாங்கித்தான் ஆகனும் என்னு...

கொஞ்ச காலம் போகவே
வீட்டுல இருக்குறவங்க
உனக்கு கல்யாணப் பேச்ச
ஆரம்பிக்குறாங்க...

திருமணமும் சிறப்பா முடிஞ்சி
நீ போகும் போது எல்லோரும்
அழுறாங்க நான் மட்டும் ஓரத்தில
உன்ன பார்த்து மெளன மூச்சு
விடும் ஊமையா நிக்குறன்..

எதிர்பாராம நீ ஓடிவந்து
என் தோளோட தலைய முட்டி
அழும் போதுதான்
நம் உறவின் தாகத்தை
உணர்ந்து கலங்காத
நானும் கலங்கிவிட்டன்...
(இஷான்)

எழுதியவர் : இஷான் (23-Mar-20, 10:20 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 64

மேலே