உயிர் வாழும் காதல்

உயிர் வாழும் காதல்

ஆண் :
உறவா அடி என் உறவா வந்தவள் - நீ தானே
இரவை பகலாய் மாற்றியதும் - நீ தானே

மொழியை காதல் மொழியை
கற்று கொடுத்ததும் - நீ தானே
உலகை இந்த உலகை நம் கண்களுக்குள்
கைதி செய்ய வைத்ததும் - நீ தானே

நெஞ்சில் என் நெஞ்சில் நம் வாழ
கூடு கட்ட வைத்ததும் - நீ தானே

நிச்சயதார்த்தம் உன் நிச்சயதார்த்த
மேடையில் அமர்ந்தவளும் - நீ தானே

பெண் :
உறவே உன் உறவா வந்தவள் - நான் தானே
தாய் என் தாய் தந்தையிடம் நம் காதலை
புரியவைக்க முடியாதவள் - நான் தானே

பட்டு புடவையுடுத்தி இந்த மேடையில்
பட்டும் படாமலும் அமர்ந்தவள் - நான் தானே
அக்கினி குண்டத்தில் இருக்கும் தீ
போல எரிகிறவள் - நான் தானே

என் கண்ணுக்கு மணவறையும் பிணவறையும் சமம்
என்று அமர்ந்தவள் - நான் தானே

ஆண் பெண் :
இருவருடைய காதலை புரியாதவர்களுக்கு
மரணத்தின் மூலம் புரியவைக்க போவதும்
- நாம் தானே

முடிவில்லா உயிர் வாழும் காதலே .....


மு.கா.ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.கா . ஷாபி அக்தர் (4-Apr-20, 4:18 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 551

மேலே