கெடுக்க நினைக்காது
மனித வாழ்க்கை தரம் உயர
மானுடம் உருவாக்கியது
அறிவு ,சிந்தனை , மொழியாகும்
இத்தனையும் பெற்றபின்
வேற்றுமையை உருவாக்கி
ஒற்றுமையைக் கெடுத்து
அடித்துக்கொண்டு அழிந்தால்
மானுடம் சிறக்குமா ?
மனித நேயத்தை இழந்து
மிருகமாக மாறும் மனிதர்களென
விலங்குகளோடு ஒப்பிட்டால்
விலங்குகளுக்கு அது அவமரியாதை ,
மானுடத்தை விட மிருகங்கள்
மேன்மையானது –பசி
போக்கி, உயிர் வாழ வேட்டையாடும்,
கெடுக்க நினைக்காது