எல்லாம் இன்ப மயம்❣️❣️
பிறத்தல் புண்ணியம் ,
வாழ்தல் பாவம் ,
மடிதல் தவம் ,
பாவத்தில் இருந்து
விடுபடும் தவமாய்
மரணத்தைப் பார்த்தால்
இறப்பும் இங்கு இன்ப மயம் ..,👈
துவள்வதும்
வீழ்வதும்
வாழ்வதற்கு என
எண்ணித் துணிந்தால்
தோல்வியும் இங்கு இன்ப மயம் ..,👈
துணை வந்த உறவும்
நலம் பாராட்டிய நட்பும்
விட்டு விலகினும்
நடந்த நினைவுகளோடு
கடந்து செல்ல பழகிக்கொண்டால்
தனிமையும் இங்கு இன்ப மயம் ...,👈
துன்பம் என்று ஒன்றும் இல்லை
இங்கு
துவண்டு போக தேவை இல்லை ,!!👍
நிஜம் என்று ஏதும் இல்லை
இங்கு
உன் நிழலும் கூட சொந்தமில்லை ,!!👍
பார்வை இல்லாமல் பார்ப்பவனும் உண்டு
கண் பார்வை கொண்டு வீழ்ப்பவனும் உண்டு !!👈
யாவும் இங்கே உன் எண்ணத்தின் எழுச்சி
கஷ்டமும், இஷ்டமும் உன் மனதின் காட்சி !!👈
மரணத்தை நோக்கி உன் பயணம்
இடையில் ஏன் இத்தனை மயக்கம் ?🌜
எல்லாம் இங்கு மாயை
இதை உணர்ந்து கொண்டால்
எல்லாம் இங்கு இன்ப மயம் ❣️
என்றும்...என்றென்றும்
ஜீவன்✊✊