உதிரமும் - உறவும்

உதிரம் என்ற ஒரு வார்த்தை
உறவை ஆட்டிப் படைக்கிறது

உரிமை என்ற சொல்லையும்
தன் வசமாக்கிக் கொள்கிறது

உடன் பிறப்புகள் மத்தியிலே
உலவும் அந்த அன்னோன்யம்

விவரிக்க தமிழில் வார்த்தைகள்
போதாது என்று சொல்வேன் நான்

குடும்ப சூழல் என்றாலே
உடன் பிறப்புகளின் ராஜ்யம் தான்

அம்மா அப்பா துணையுடன்
உலகையே ஆட்டிப் படைத்திடுவோம்

ஒருவர் தேவையை மற்றொருவர்
பூர்த்தி செய்வதே அலாதி தான்

குறும்பு ஷேஷ்டை எல்லாமே
எல்லோர் வீட்டிலும் நடப்பவை தான்

குழைந்தை பருவம் முதற்கொண்டு
விவரம் தெரிகின்ற நாள் வரைக்கும்

எல்லாம் நன்றாய் இருக்கும் தான்
ஆனந்தம் அதிகரிக்கும் உண்மைதான்

மனதும் அறிவும் அவரவர்க்கு
வேறு படுவது இயற்கைதான்

இவை இரண்டின் அளவுகோலும்
அனைவர்க்கும் சமமாய் இருப்பதில்லை

ஒருவர் சொல்லும் வார்த்தையின் பொருளை
மற்றவர் அப்படியே ஏற்பதில்லை

பரவாயில்லை என்று "சொன்னவரும்"
அதை இயல்பாய் எடுத்துக்கொள்வதில்லை

சொல்லும் வார்த்தையின் வீரியமே
இங்கு சகலத்தையும் தீர்மானிக்கிறது

உதிர்த்த சொல்லும் உதிர்த்ததுதான்
அதை திரும்பிப் பெற முடியாது

எதிரே இருப்பவர் மனமும்
இந்த வீரியம் கண்டு துடிக்கிறது

இவ்வளவு காலம் இருந்த பாசம்
ஒரு நொடியில் மனதை விட்டு பிரிகிறது

இத்தகைய செயல்களின் மூலம் தான்
கருத்து வேறுபாடு பிறக்கிறது

இது யாவருக்கும் பொருந்தும் தான்
உறவில் மட்டும் இது இல்லை

நட்பிலும் இது நிறைய உண்டு

முன்பின் தெரியா நபர்களிடமும்
நாம் பேசுகையில் இது நடப்பதுண்டு

முன்னே சொன்ன "உரிமை" தான்
உறவில் சகலத்தையும் குலைக்கிறது

புரிதல் அடிபட்டு போகிறது
"நீ யார் சொல்ல" என்ற கேள்வி எழுகிறது

சண்டையும் பெரிதாய் வளர்கிறது
சமரசம் ஓடி ஒளிகிறது

மன்னிப்பு என்ற மகத்தான சொல்லும்
இங்கு கொச்சைப் பட்டு போகிறது

இதற்கு தீர்வுதான் என்ன
என நான் யோசித்தேன்

உடனே விடையையும்
தெரிந்து கொண்டேன்

"உரிமை" என்ற சொல்லின்
பொருளை ஓரளவு தளர்த்துவதே

அதிக உரிமை எடுத்துக்கொண்டால்
உறவும் ஆபத்தில் தான் போய் முடியும்

எதற்கு இந்த வீண் வேலை
உரிமையை சற்றே புறம் தள்ளி

உறவை என்றும் போற்றிடுவோம்
உல்லாசமாய் வாழ்ந்திடுவோம்

வீட்டிற்கு வீடு வாசல்படி
என்பது போல் தான் நான் சொல்லுவதும்

இவை அனைத்து "மனித குலத்திற்கும்"
பொருந்தும் தான்

சற்றே நீங்களும் சிந்தியுங்கள், பின்
உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (18-Jun-20, 5:27 pm)
பார்வை : 75

மேலே