காதல் சின்னம் ❤️

இரு இதயங்கள்
இரத்தமும் சதையுமாய்
இணைந்துதான்
காதல் சின்னம்
உருவானதாம்...

நம் இரு இதயங்களும்
இரத்தமும் சதையுமாய்
மட்டும் அல்ல
உயிருமாய் இணைந்ததால்
காதல் உருவானது...

இணைந்த இரு இதயத்தில்
ஒன்று பிரிந்தாலும்
மற்றொன்று
துடிப்பை நிறுத்திக் கொள்ளும்...

என்பதை மட்டும்
மறவாதே அன்பே...

எழுதியவர் : கீர்த்தி (26-Jun-20, 10:30 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : kaadhal sinnam
பார்வை : 203

மேலே