ஆராதனை
அன்பே உன் அழகை
வர்ணித்து கவிதை
எழுத நினைத்தேன்...! !
நினைத்தவுடன்
வார்த்தைகள்
அணிவகுத்து நின்றன...! !
மேலும்
அவைகளிடையே
கடுமையான
போட்டா...போட்டி..! !
கவிதையில்
இடம் பிடிக்க...! !
என் மனதிலும்
கடுமையான
போராட்டம்....! !
எந்த வார்த்தையை
கொண்டு உன் அழகை
வர்ணிப்பது என்று...! !
கடைசியில்
முடிவு எடுத்தேன்..
உன் அழகை
வார்த்தையால்
சிறைப்படுத்த
வேண்டாமென்று...!
நேரில் வந்தே
உன்னை ஆராதனை
செய்து ரசிக்கிறேன்..! !
--கோவை சுபா