அம்மா
ஐயிரண்டு மாதங்கள்,
கருவறையில் சுமந்து;
தொப்புள்கொடி உறவாய்,
உயிர் கொடுத்து..!!
பிரசவ வலியினை,
துட்சமாய் மறந்து;
தொட்டுத் தழுவி,
முகமுகமாய் நுகர்ந்து..!!
கண்னே! பவளமே!
என்றெனை அழைத்து;
பசிஉறக்கம் தளர்ந்தே,
அள்ளியெனை அணைத்து..!!
வடியும் தேனாய்,
முத்தமழை தந்து;
ஊர்கண் படுமே,
பொத்தியெனை வளர்த்து..!!
இத்தனை பரிவோடு,
கொட்டித் தீர்த்தவளே!
எதை கொண்டு அடைப்பேன்
உன் அன்பிற்கு ஈடாக..!!
-ஆ.பிரவின் ராஜ்