ரவுடியின் கனவு

அண்ணே இதுவரைக்கும் நான் கண ட கனவு பலிக்காமல் போனதில்லை..நேத்து ஒரு கனவு கண்டேன்.
@@@@@@@@
சொல்லித் தொலைடா மூக்கையா.
@@@@@@@@
ஆளில்லாத ஒரு கட்சில ரவுடிகளுக்கு முன்னுரிமை குடுத்துச் சேத்துக்கிறாங்க..அந்தக் கட்சில சேந்துட்டா நமக்கு பாதுகாப்பு. அந்தக் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையைக் காட்டினப் போதும் நம்ம செஞ்ச பழைய குற்றங்களுக்காக நம்மள தேடிட்டு இருக்கிற அநிகாரிங்ககூட நம்மளக் கண்டுக்காம ஒதுங்கி போயிடுவாங்க.
@@@@@@@#
அட மூக்கையா நீ கண்டது கனவு இல்லடா நிஜம்தான்டா. நமக்கு பாதுகாப்போட மாதச் சம்பளமும் கிடைக்கும்டா..
@@@@@@@@@
இதுதாண்ணே நேர்மையான கட்சி. நம்ம காட்டில தெனம் மழைதான்.

எழுதியவர் : செல்வம் (6-Sep-20, 12:12 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 139

மேலே