அவளும் ஐந்திணைகளும்
'மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!
•
•
'காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!
•
•
'வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!
•
•
'கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!
•
•
'மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!
•
•
"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!
•
•
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான் ❤