நீர்தான் நீர்தான் நிரந்தர தீர்வு

வான் நீரை சேகரித்தே பூமியின் வளத்தை பெருக்கிடுவோம்
வான் மழை பொழிந்திடவே நீள் மரங்களை வளர்த்திடுவோம்
ஆற்றில் நீர்த்தேக்க ஆறுகளில் அணைகளை கட்டிடுவோம்
ஆழ்துளை கிணறுகளால் அதிக நீர் உறிஞ்சுவதைத் தடுத்திடுவோம்
சாக்கடை நீரினையும் சலித்து தூய்மையாக்கி சாப்பிட பயன்படுத்துவோம்
பிரிந்த நீர் நிலைகளை இணைத்தே செறிவாக்க இணைந்து உழைத்திடுவோம்
ஆழ்ந்த வாய்க்கால் தோண்டி ஆற்று நீரை கொணர்ந்து பயிரினை வளர்த்திடுவோம்
குளங்குட்டை ஏரிகளை நீர் நிரப்பி புனிதமாக்கி நீண்ட வாழ்வு வாழ்ந்திடுவோம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Sep-20, 5:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1391

மேலே