கவிதைப் போட்டி

போட்டி விவரங்கள்
*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

நடத்தும்

திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *25. 10 .2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்விவ், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்கியக் கலைச்சொற்களை
24 - வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.

*தலைப்புச் சுதந்திரம் உங்களுக்கு உண்டு.*

நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*

https://forms.gle/VWv7Wc8YQH7teAFN9

அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. *பிடுகு* - இடி
2. *ஒக்கல்* - சுற்றம் 3. *ஓவம்* - ஓவியம் 4. *இழிஞன்* - தாழ்ந்தோன்
5. *நூழிலர்* - வணிகர்
6. *முகரிமை* - பேரறிவு; தலைமை
7. *வறுவிலி* - திக்கற்றவன்; வறியவன்
8. *நொவ்வல்* - துன்பம்
9. *பழனம்* - வயல்
10. *புடையல்* - மாலை
11. *மங்குல்* - மேகம்
12. *மதுகை* - மனவலிமை

மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 24.10.2020-க்குள், அனுப்ப வேண்டிய புலன எண் 9080513099

*முயன்றால் விண்ணை தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் நம் பெயரை பதிக்க வைப்போம்* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*

பாசத்துடன்,

*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.

பரிசு விவரங்கள்
பங்குபெறும் அனைவருக்கும் மின்சான்றிதழ் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (20-Oct-20, 8:31 am)
பார்வை : 286

மேலே