விழி திறந்தேன்

தேர்தலில் வெற்றி பெற்றுத்
_தினமொரு கோலம் பூண்டேன்.
பேர்புகழ் பதவி யோடு
-பெருந்தொகைப் பணமும் கொண்டேன்.
பார்புகழ் தலைவ னாகப்
-பாவனை செய்து வந்தேன்.
சீர்மிகு ஆட்சி செய்து
_சிறப்பெலா மடைந்தேன் நானே!

மார்பினைத் தட்டியோர் நாள்நான்
_மக்களின் முன்னே சென்றேன்.
வேர்தனில் காய்க்கும் நெல்லின்
_விற்பனை நிலைமை கேட்டேன்.
ஊர்சன மெல்லா மென்னை
_உதைத்திடத் திரளக் கண்டேன்
போர்வையுள் கனவை விட்டுப்
_புதுவிழி திறந்தேன் நானே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-20, 1:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 100

மேலே