உன் பார்வையில் பரவசம் ஆனேன் 555

***உன் பார்வையில் பரவசம் ஆனேன் 555 ***


ப்ரியமானவளே...


வளைந்த இரண்டு
கருப்பு வானவில்...

நடுவில் கடுகுபோல்
ஓர் பொட்டு...

வெண்சங்கு பூவில்
மகரந்தம்
போல்
இரு கண்கள்...

ரெட்டை குழல்
துப்பாக்கி போல் நாசி...

உரித்த கோவைபழம் போல்
ரேகைகள் கொண்ட இதழ்கள்...

காதோரம்
கவி பாடும் ஜிமிக்கி...

வழுக்குமர கழுத்தில்
நூல் போல் தங்க சங்கிலி...

நேர் வகிடு எடுத்து
நெஞ்சுமேல் வீற்றிருக்கும்...

ரெட்டை ஜடை
மலர்சூடிய
அழகு
பின்னல்...

உன் பார்வையில்
பரவசம் ஆனேன்...

பாதகத்தி உன் பார்வை பட்டு
உன்மீது காதல் கொண்டேன்...



நீயோ என்
நெஞ்சில் குடிகொண்டாய்...

இன்றைய என் காதலியே
நாளை நீயே என் துணைவி.....



எழுதியவர் : முதல் பூ பெ.மணி (3-Jan-21, 5:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 421

மேலே