உன்னைக் காண கண்கள் இறைவா

புறக்கண்கள் அளித்தாய் இறைவா இயற்கையில்
ஒருவொரு அழகுப் பொருளிலும் மலர்களில்
பச்சை மரங்களில் துளிர் இலைகளில்
தொங்கும் காய்களில் கனிகளில் ஓடும்
நதிகளில் ஆர்க்கும் கடலில் நீலவானில்
மரகதப் போர்வைத் தாங்கும் மாமலைகளில்
வெள்ளிப்பனி மலையில் வெள்ளி நிலவில்
மின்மினும் தாரகைகளில் இப்படி காணும்
பொருள்களில் எல்லாம் அழகு நுகர்ந்து
மனப் போதையில் மிதக்கிட ஆனால்
புறக்கண்களாம் இவைகளால் உன்னை மட்டும்
நேரில் கண்டு எந்தன் மனதையே
உனக்கு காணிக்கையாய் அளிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jan-21, 2:30 pm)
பார்வை : 184

மேலே