காலம் அழித்த கல்வெட்டு

கல்வெட்டால் செதுக்கினால்
காலமெல்லாம் அழியாது என்று
எண்ணியே செதுக்கினர் அந்நாளில்
கதை சொல்லும் கல்லை வெட்டியே
கட்டிடம் அமைப்பார்கள் ஒருகாலத்தில்
என்றுதெரியாத பழைய மன்னர்கள் !
முடியரசு போய் குடியரசு வந்தது
படிக்கட்டெல்லாம் ஐநூறு ஆயிரம்
கொடுத்தவன் பெயர்களில் கல்வெட்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-21, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 135

மேலே