காலம் அழித்த கல்வெட்டு
கல்வெட்டால் செதுக்கினால்
காலமெல்லாம் அழியாது என்று
எண்ணியே செதுக்கினர் அந்நாளில்
கதை சொல்லும் கல்லை வெட்டியே
கட்டிடம் அமைப்பார்கள் ஒருகாலத்தில்
என்றுதெரியாத பழைய மன்னர்கள் !
முடியரசு போய் குடியரசு வந்தது
படிக்கட்டெல்லாம் ஐநூறு ஆயிரம்
கொடுத்தவன் பெயர்களில் கல்வெட்டு !