மழையன்று

உன் அணைப்பிலிருந்து
உருவிய என் கரம்
புகையென மேலெழுந்து
காற்றினில் மிதந்து
மேகமென உருவெடுத்து
மழைநீராய் கசிந்தது

குடைப்பிடித்து
குதிகால் உயர்த்தி
நீ நடக்கும் சாலையில்
கண்டுற்ற ஈரமெல்லாம்
மழையல்ல பெண்ணே
உனையேந்த காத்திருக்கும்
என் உள்ளங்கை ரேகையடி

எழுதியவர் : S. Ra (9-May-21, 11:50 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 99

மேலே