கொவ்வை இதழ்மலரும் கோவில் எழில்சிலையே

அவ்வையின் வெண்பா அழகுத் தமிழ்மகளே
கொவ்வை இதழ்மலரும் கோவில் எழில்சிலையே
பவ்விய பாரிஜாதப் பூவேபூத் தூவுவேன்
எவ்வழி நீநடந்தா லும்

--இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தளை விதிகள் கவிதை வடிவமைப்புடன் அதன்
ஓசையையும் சுட்டும்
பொதுவாக செப்பல் ஓசை உடைத்து வெண்பா
இங்கே இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள் விரவி
வந்ததால் இது ஒழுகிசை செப்பல் ஓசை எனப்படும்

ஒழுகிசை செப்பல் ஓசை என்றால் jQuery171003764711565078538_1621656962117?

எழுதியவர் : கவின் சாரலன் (22-May-21, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே