இறுதி நாள்

நந்திக் கடற்கரையில் நான் நடந்து போகையிலே
காற்றில் மிதந்து வருகிறது உன் சலங்கைச் சத்தம்
அந்திச் சூரியனை நான் ஆராயும் வேளையிலும்
காதோரம் ஒலிக்கிறது அது நித்தம்.. நித்தம்..

அன்று காரிருளில் கை கோர்த்து நடக்கையிலே
பிரிவிற்காய் பரிந்தளித்தாய் நீ ஓர் காதல் முத்தம்
இன்று இறுதிப் படையெடுப்பில் இடர் படும் பொழுதினிலும்
உனை நினைத்து உருகுகிறது என் சித்தம்... சித்தம்...

எழுதியவர் : இளமாறன் (23-Jun-21, 3:12 pm)
சேர்த்தது : இளமாறன்
Tanglish : iruthi naal
பார்வை : 74

மேலே