ராசாத்தி மவராசி

கண்ணே கலங்காதே
ஒண்ணு மாகதே...

உனக்கு எதாவது ஒண்ணுனா நா இருக்க...

எனக்கு எதாவது ஒண்ணுனா யார் இருக்கா சொல்லூ தங்கம் நீ...

கண்ணே தங்கமே
காணும் பொற்சிலையே...

ஒத்தயில நீநின்னா
உசுராஇருந்து ஒன்னநா
பாத்துகிற...

எதையும் கண்டு அச்சப்படாதே
நிச்சயம் ஓர்நாள் உச்சம் தொடுவோம்...

நா வரையும் சித்திரமாவாய் நீ...
நா பாடும் பாடலாவாய் நீ..

கண்ணே தங்கமே
காணும் பொற்சிலையே...

என் வானளவு கற்பனைக்குள்
உன்னை வைக்கிறே...

என்ந நீ பாத்தாலே
இரவும் வெளிச்சத்திலெ...

உன்ந நா பாக்க
என்நெஞ்சம் பஞ்சு போல
மாறி ஊஞ்சலாடும் காற்றிலெ...

அழகே பேரழகே...
நிலவே பொன்நிலவே...
உயிரே ஆருயிரே...
ராசாத்தி மவராசி...

சொல்கிறேன் கண்ணே உன்ன
வண்ணம்போல் வர்ணிக்கிறேன்...

என்னென்ன தேவையோ
சொல்லிடு

அதைஅதை அப்பவே
நிறைவேற்றி கொடுக்கும்

தொண்டன் போல் உனக்கு இருக்கிறேன்...

எதையாவது சொல்லிடு மௌனம்தான் நீளுமோ
எதுவரை...

எப்படியாவது உன்னோடு சேந்து
வாழனும்னு வாழ்கிறேன்
இதுவரை...

எப்பையாவது என்னோடு வாழ்ந்திட
மாட்டாயோ என தவிக்கிறேன்
உயிர் போகும்வரை...

எழுதியவர் : BARATHRAJ M (20-Jul-21, 5:40 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 72

மேலே