காற்றுக்கு என்றும் வருத்தம்தான்

காற்றுக்கு
என்றும் வருத்தம்தான்

மேகங்களுடன்
தான் ஒன்றாய்
வாழ்ந்தாலும்

'சூல்' தருவது
என்னவோ
சூரிய
கதிர்கள்தான்

பூமியின் நீரை உறிஞ்சி
'சூலாய்' மேகத்தின்
வயிற்றை நிறைத்து

தன்னை ஒரு
பயண பொருளாய்
வைத்து

மேகங்களை
மக்கட் பேறாய்
மழையை பூமியில்
பொழிய வைக்கிறதே

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Jul-21, 11:44 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 107

மேலே