முழுமக்கள் காதலவை மூன்று – திரிகடுகம் 9
இன்னிசை வெண்பா
பெருமை யுடையார் இனத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை. 9 – திரிகடுகம்
பொருளுரை:
பெருந்தன்மை உடையவருடைய இனத்தினின்று நீங்குதலும், தமக்கு உரியராதல் இல்லாத மாதரை விரும்பி அவரோடு வாழ்தலும், சிறந்தவை அல்லாத செயல்களைச் செய்யத் துணிதலும் ஆகிய இம்மூன்றும் மூடர் விரும்புபவையாம்.
கருத்துரை:
நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும் அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.
பெருமை - அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை.
உரிமை: கிழமை, பற்று,
தன்மனைக்கு உரிமையுடையவள் மனைவி.
அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு:
படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது: பிறந்தபடியிருப்பவர்,