ஏக்கம்

" தனியே நான் இருந்தேன்!
புனிதை நீ வருவாய் என்று,

கணித மேதை போல கணக்கிட்டு
நேரம் சொன்னாயே?

தணிகை அதிகாரி போல நடுவில் ஒருவர் வந்தரோ ?
வணிதை நீ எண்ணம் மாற ?

புனித என் அன்பை கண்டால்,
எந்த மனித இதயமும் மயங்குமே!

பனித்த தலையினருக்கு அஞ்சி,
கனிந்த இந்நல் அன்பை
மறந்தாயோ?

தனித்த தன்மை கொண்ட உன் அன்பு!
அது பிணைத்த என் இதயத்தை திருப்பி தந்துவிட்டு ,
நினைத்த படி செல்!."

எழுதியவர் : (8-Sep-21, 10:58 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : aekkam
பார்வை : 149

மேலே