காதல் பாதை

என் அன்பே உன்னை
கண்ட நாள் முதல்
ஏக்கத்துடன்
உன்னை பார்த்தேன்..!!

தயக்கத்துடன்
உன்னை தொடர்ந்தேன்..!!

நாட்கள் நகர்ந்தது
நமக்குள்
நெருக்கம் பிறந்தது
காதல் மலர்ந்தது ..!!

காதல் வானில்
பாடி திரிந்து
காதல் பாதையில்
கை கோர்த்து நடந்து ...!!

"அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

என்று வள்ளுவனின்
குறள் வழியில்
வாழ்க்கை பாதை அமைத்து
வாழ்வில் இணைந்தோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Sep-21, 8:11 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal paathai
பார்வை : 112

மேலே