சண்டித்தனம்
மனிதா
கையளவு மனசில்
ஆயிரம் எண்ணங்கள்
ஆயிரம் வலிகள்...!!
எண்ணங்கள் யாவும்
நடப்பதில்லை
வலிகள் யாவும்
தொடர்வதில்லை...!!
இந்த உண்மை புரிந்தும்
மனிதா உன் மனம்
பல சமயங்களில்
சண்டித்தனம் செய்து
நொண்டி குதிரைப்போல்
சறுக்கி விழுந்து விடுகிறது...!!
--கோவை சுபா