எனக்கு வயது 10

எனக்கு வயது 10.

கோவிட் 19 ஆல்
பள்ளி சென்று 👔 கல்வி
கற்க முடியாமலும்,
தன்னை ஒத்த வயது சிறுவர்களுடன்
சேர்ந்து விளையாட
முடியாமலும்,🤸🚴
வீட்டிற்குள் சிறைப்பட்டு🔒
இருக்கும் சிறுவன்
ஒருவன்.

[ போயும் போயும்,
பழுதடைந்த பாரினிலே!
படைத்தாயே என்னை.

பல வருடம் முன்பே
படைத்திருந்தால்,
பாரின் அழகைக் கண்டு
மகிழ்ந்திருப்பேன்,
மகிழ்ந்தே ! என்னைப்
படைத்த உன்னையும்
மறந்திருப்பேன்.

பரிதவிக்கிறேன்
நான் இங்கு,
பாழடைந்த பார்
வேண்டாம் என்று.

வேண்டுவதெல்லாம்
உன் மடி ஒன்றே,
வந்து விடு ஓடி,
வந்தே என்னை
சிறை மீட்டு விடு.]


ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Sep-21, 5:44 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 31

மேலே