சோகக் கதைகள்

சோகக் கதைகள்.

முடிந்த கதைகளை,
மூட்டை கட்டி
வைத்து விடு,

திரும்பவும் திரும்பவும்
பேசாதே.

அறிவை அளித்தான்
ஆண்டவன் அதற்கே.

கட்டி வைத்த
மூட்டையை அவிழாதே,
பூதம் ஒன்று
இருக்கிறது,
முழுங்கி விடும்
உன் வாழ்வை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (11-Oct-21, 8:48 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : sokak kadhaigal
பார்வை : 76

மேலே