இரண்டாவது கல்யாணம் 👨‍❤️‍💋‍👨💏

*********************************

"இனிமே
உங்கூட ஒரு நிமிஷம் கூட
வாழ முடியாது...
உன் முகத்தைப் பார்க்கவே
விரும்பவில்லை..
கெட் லாஸ்ட்...",
என்று பிரிந்து போனாள்
என் முதல் மனைவி.

'எனக்கு
எல்லாமே நீதான்',
என்று சொன்னவர்கள்,
யாரோவாகிப் போவது
சிலரின் வாழ்வில்
தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஒரு
சுபயோக சுபதினத்தில்,
எங்களது விவாகரத்து
நீதிமன்றத்தில்
உறுதியானது.

அத்தனை
எளிதானதில்லை,
நிரந்தர பிரிவுக்குப் பின்,
தனிமை.

பதினோரு மாத
பாலைவன தனிமைக்குப்பின்,
மீண்டும்
ஒரு தேவதை
என் வாழ்க்கை பாதையில்
குறுக்கிட்டாள்.

எனக்கு
இரண்டாவது கல்யாணம்
என்பதால்,
அவள் வீட்டில்
எங்களை ஏற்கவில்லை.

ஒரு வழியாக
எனது இரண்டாவது
திருமணம் முடிந்து,
எனக்கு,

முதலிரவு
அல்லது
இரண்டாம் இரவு.

ஒரு விஷயம்
சொல்லுவேன்,
ஆனால், இதை
படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்,
என்னை
திட்டக் கூடாது... சரியா...

'என் இரண்டாவது மனைவிக்கும்
இது இரண்டாவது இரவுதான்.'

அதுக்கு
ஏன் தம்பி,
திட்டனும்..? என்று
யோசிக்காதீர்கள்...
காரணம் அடுத்த பாரா.

"ஹி..ஹி...
விவாகரத்து செய்த
என் முதல் மனைவியைதான்
நானே இரண்டாவது கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்..."








✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Nov-21, 11:46 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 107

மேலே