ஒட்டிய காட்சி திரியின் அறந்திரியும் – அறநெறிச்சாரம் 37

நேரிசை வெண்பா

கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடும் அதுபோலும் - ஒட்டிய
காட்சி திரியின் அறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம். 37

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

செங்கல் அறுக்கும் கருவி கோணலானால் அதனால் அறுக்கக் கருதிய செங்கல்லும் கோணலாகும்;

அதுபோல், பொருந்திய அறிவு வேறுபடின் அறமும் வேறுபடும் என்று நல்லொழுக்கத்தில் உயர்ந்த பெரியோர் கூறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-21, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே