ஒட்டிய காட்சி திரியின் அறந்திரியும் – அறநெறிச்சாரம் 37
நேரிசை வெண்பா
கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடும் அதுபோலும் - ஒட்டிய
காட்சி திரியின் அறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம். 37
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
செங்கல் அறுக்கும் கருவி கோணலானால் அதனால் அறுக்கக் கருதிய செங்கல்லும் கோணலாகும்;
அதுபோல், பொருந்திய அறிவு வேறுபடின் அறமும் வேறுபடும் என்று நல்லொழுக்கத்தில் உயர்ந்த பெரியோர் கூறுவர்.