பாவலர்மணி வக கன்னியப்பனார் வாழி - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
கொடைகொடுக்கும் தங்குலத்தின் புகழே ஓங்கக்
குணங்கொழிக்கும் கன்னியப்பர் வாழ்வைக் கண்டேன்!
அடைகொடுக்கும் நற்சுவையாய்ச் சொற்கள் ஆண்டார்!
அணிகொடுக்கும் பேரழகாய்ச் செயல்கள் பூண்டார்!
படைகொடுக்கும் நல்லரணாய்ப் பயிற்சி மன்றில்
பணிபுரிந்தார்! பாமணியாய்ப் பட்டம் பெற்றார்!
மடைகொடுக்கும் வளமாகப் பாடும் பாட்டில்
நடைகொடுக்கும் புலமையினைக் கற்றார் வாழி! 1