வாழ்வின் அவலம்

வாழ்வின் அவலம்..
----'
தெரிந்தவர்கள் தெரியாதோர் போலவும்,

புரிந்தவர்கள் புரியாதது போலவும்,

அறிந்தவர்கள் அறியாதோர் போலவும்,

அடக்கிக் கடக்கிறார்கள்!


தெரியாதோர் தெரிந்தது போலவும்,

புரியாதோர் புரிந்தது போலவும்,

அறியாதோர அறிந்தவர் போலவும்,

அலம்பித் திரிகிறார்கள்!

இடையே ,

செக்கிடைச் சிக்கிய
சிற்றெறும்பாய்
சிதைந்து சிரிக்கிறார்கள்-
சிலபேர்!

-யாதுமறியான்.

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (21-Feb-22, 10:00 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 80

மேலே