வாழ்வின் அவலம்
வாழ்வின் அவலம்..
----'
தெரிந்தவர்கள் தெரியாதோர் போலவும்,
புரிந்தவர்கள் புரியாதது போலவும்,
அறிந்தவர்கள் அறியாதோர் போலவும்,
அடக்கிக் கடக்கிறார்கள்!
தெரியாதோர் தெரிந்தது போலவும்,
புரியாதோர் புரிந்தது போலவும்,
அறியாதோர அறிந்தவர் போலவும்,
அலம்பித் திரிகிறார்கள்!
இடையே ,
செக்கிடைச் சிக்கிய
சிற்றெறும்பாய்
சிதைந்து சிரிக்கிறார்கள்-
சிலபேர்!
-யாதுமறியான்.
-யாதுமறியான்.