சிற்றாமணக்கு நெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மருந்தின் அழலும் வளியான்மூ லத்துள்
பொருந்தும் அழலுமறப் போக்குங் - குருந்திற்கு
நற்றாய் எனவளர்க்கும் நாளுமழ லுந்தணிக்குஞ்
சிற்றாம ணக்குனெய்தான் நேர்
- பதார்த்த குண சிந்தாமணி
இது மருந்துகளால் ஏற்படும் சூட்டைத் தவிர்க்கும்; வாயுவினால் மூலத்தில் உண்டாகிற வெப்பத்தை நீக்கும்; உடல் வளர்ச்சிக்குத் தாயைப் போல உறுதுணையாகும்