தாயின் மணிக்கொடி பாரீர்

தாயின் மணிக்கொடி
------------------------------------

தாயின் மணிக்கொடி பாரீர்
தெருவெல்லாம் ஒவ்வோர் வீட்டின் மேலும்
பள்ளிகள் தோறும் அலுவலகங்கள் தோறும்
கம்பத்தின் மேலே கம்பீரமாய்ப் பறக்கிறது
நம் சுத்தந்திர திருநாட்டின் வண்ண வண்ண
மூவர்ண மணிக்கொடி இதனை
வணங்கிடுவோம் இம்மணிக்கொடியை
ஜாதி மதம் மொழிகளுக்கு அப்பால்
நம்மை நம் மனதை அழைத்துச் செல்லும்
இதனைப் பார்த்து மகிழ்வோம் நம்மில்
பூசல் இல்லை சண்டை ஏதுமில்லை
நாமெல்லாம் இந்நாட்டு மக்கள் என்றே
ஒன்று சேருவோம் நம் நாட்டைக் காப்போம்
நம் கொடியின் புனிதத்தை என்றும்
நம் உயிருக்கு மேல் நினைத்து போற்றிடுவோம்
அல்லும் பகலும் உழைத்திடுவோம்
உண்மை உழைப்பால் உயர்ந்திடுவோம்
தர்மம் காப்போம் இதுவே எங்கள்
உங்களுக்கு வழிகாட்டும் இனிய பாதை
என்று பிறருக்கும் பிரகடனம் செய்வோம்

வாழ்க மணிக்கொடி வாழ்க பாரதம்
வாழ்க வாழ்கவே எங்கள் இந்தியா நன்னாடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-22, 8:20 am)
பார்வை : 32

மேலே