383 ஊண்மனை மருந்தின்பம் உறவாதல் உதவி - கைம்மாறு கருதா உதவி 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

அனமிலார்க் கனமாய் வாழ
..அகமிலார்க் ககமாய்த் துன்ப
மனமுளார்க் குவப்பாய் நோயின்
..வருந்துவோர்க் கரும ருந்தாய்த்
தனமிலார்க் கரும்பொன் னாய்நற்
..றாய்தந்தை யிலார்க்கன் னாராய்
இனமிலார்க் கினமா யார்க்கும்
..யாவுமா யிசைத லன்பே. 1

- கைம்மாறு கருதா உதவி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உண்ண உணவில்லாதவர்க்கு உணவு கொடுப்பவராய், வசிக்க வீடில்லாதவர்க்கு இடம் அளிப்பவராய், துன்புறும் மனமுடையோர்க்குத் துன்பம் நீக்கி மகிழ்ச்சி அளிப்பவராய், நோயில் வருந்துவோர்க்குச் சிறந்த மருந்தாய், செல்வமில் லாதவர்க்குப் அருமையான பொன் போன்றவராய், நல்ல தாய் தந்தை இல்லாதவர்க்குத் தாய் தந்தையாய், உறவு இல்லாதவர்க்கு உறவினர் போன்று காப்பவராய் எல்லார்க்கும் வேண்டும் எல்லாமாக வாழ்வதே அன்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அனம் - சோறு. அகம் - வீடு. தனம் - செல்வம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-22, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே