நன்றியைக் கொல்வான் மனிதன்

மனிதனின் உயிர்
மரம்போட்ட பிச்சை...

இங்கு பலருக்கும்
புரியவில்லை
உழைப்பிற்கு மிஞ்சிய
வருமானம் பணமல்ல பாவமென்று...

பாவம் பலவகைபட்டாலும்
அத்தனைப் பாவங்களையும்
இந்த ஞாலத்தில்
மனிதன் மட்டுமே செய்கிறான்

முல்லைக்குத் தேரையும்
மயிலுக்கு போர்வையும்
கொடுத்து மனிதம் உயர்ந்து நின்ற
மரபு மரித்துபோய்விட்டது

இன்று மனிதனைவிட
விலங்குகளே பரவாயில்லை
என்றாகிவிட்டது

ஒட்டுமொத்தமாக
தன்னை மற்றவர்களுக்கே
அர்ப்பணித்து கொண்ட
மரத்தின் தியாகத்திற்கு முன்பு;
மனிதனும் கடவுளும் எம்மாத்திரம்?

நல்ல நேரம் பார்த்துதான்
சுவாசிக்கும் காற்றை
வெளியிடுவேன் என்று
மரமே நிபந்தனை
விதிக்காதபோது - எந்த ஒரு
செயலுக்கும் நேர காலம் பார்க்க,
"கேபலம்"
மனிதனுக்கென்ன
அருகதை இருக்கிறது?

உன்ண உணவும்
குடிக்க நீரும்
சுவாசிக்க காற்றும்
இளைப்பாற நிழலும்
மரம் தருகிறபோது
கல்லை கடவுளென்பது
எத்தனை முட்டாள்தனம்

பாவத்தில் கூட
பங்குதர யோசிக்கும்
சுயநல மனிதன்,
புண்ணியத்திலா
கண்ணியத்தை
காட்டப்போகிறான்

ஓட்டம் ஒடுங்கி
ஆட்டம் அடங்கி
கடைசி கட்டத்தில்கூட
தன்னை எரிப்பதற்கு
ஒரு மரத்தின் உதவி
அவசியம் என்பதை
உணராத ஜென்மங்கள்
இந்த மண்ணில்
அவதரித்த மகாப் பாவிகள்..!

---- நிலாசூரியன் தச்சூர்

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (29-Dec-22, 5:25 pm)
பார்வை : 58

மேலே