அபூர்வ பூக்கள்

தவணை முறையில் நான் இருக்கிறேன் என கூறியவர்கள் அன்பை எல்லாம் சிறு சிறு கதாபாத்திரமாக எண்ணி பூங்கொத்து செய்துள்ளேன்.
போர்டிகோவில் நடக்கும் போது, சிநேகிதி சிநேகிதனிடம் உரையாடும் போது , திருமணத்தை பற்றி வார்த்தைகள் எடுக்கும் உறவினர்களிடம் வாதாடும் போது, வாழ்க்கையில் சிக்குண்டு நிற்கும்போது என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த பூங்கொத்தை தூக்கிகொண்டுதான் செல்கிறேன் .
ஒவ்வொரு பிரயத்தனத்திலும் ஒவ்வொரு பூக்கள் விழுகின்றன . சில சமயம் மொத்தமாகவும் சரிந்து விழுகிறது - என் நம்பிக்கையும் கூட. இருப்பினும் சிதறிய பூக்களை ஒன்று சேர்த்து பூங்கொத்து செய்கிறேன்.
தவணை முறையில் சேர்த்த பூங்கொத்துக்கு வட்டியுடன் நன்றி கூற.


-கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (29-Jan-23, 1:09 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
Tanglish : apoorva pookal
பார்வை : 94

மேலே