கடவுள் வாழ்த்து - ஐங்குறுநூறு

நேரிசை ஆசிரியப்பா

1நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா ணிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே.

- வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்.

குறிப்பு. வாலிழை -தூய அணிகலங்களையுடைய உமாதேவியார், ஒருவன்- சிவபெருமான், முகிழ்த்தன-தோன்றின.

(மேற்கோளாட்சி) ‘ஆசிரியப்பா மூன்றடியான் வந்தது’
(தொல், செய், 157, பேர். ந.)

(பிரதி பேதம்) 1 ‘மா அமேனி, ‘ ‘ மாமலர் மேனி ‘

எழுதியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார். (9-Aug-23, 5:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே