கருணை பொழியும் அருணை மலையனை --- நேரிசை ஆசிரியப்பா

கருணை பொழியும் அருணை மலையனை
*******
(நேரிசை ஆசிரியப்பா)

கருணை பொழியும் அருணை மலையனை
ஆலதின் நிழலிடை நால்வரின் குருவினை
கந்தனின் சீடனை நந்தியின் தலைவனை
முக்கண் கொண்டு தக்கனை யழித்த
சீலனை சிவனை மாலனின் நேசனை
அரவம் தரித்த அரனை
அறையினில் நிறுத்திட குறைகள் இல்லையே

********
அறையினில் = மனவறை , நெஞ்சில்

மொத்தம் 7 அடிகள் அடிக்கு 4 சீர்கள்
ஈற்றயலடி முச்சீர்
ஒவ்வொரு அடியிலும் 1 மற்றும் 3 ம் சீரில்
எதுகை
ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஏ காரத்தில் முடிவு

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Aug-23, 4:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 32

மேலே