கவிதையால் வரைகிறேன் காதல் மடல்

கவிதையால் வரைகிறேன்
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
காதல் மடல்
।।।।।।।।।।।।।।।।।।

வரைகிறேன் காதல் மடல் காதல்மொழியில் /
வந்து விட்டாய் இதயத்துக்குள் நீ /

சுட்டு விழி கண்டு-கார்மேக /
சொட்டும் மை கொண்டு வரைகிறேன் /

தோகை விரித்தாடும் வண்ண மயில் /
தோகை சிறகினை எழுத்தாணி கொண்டு /

உன் கூரிய பார்வையில் கூர்முனையாக்கி /
உன் செவ்விதழ் பூக்கள் தொடுத்து/

கவிதைபடைத்து உன் நினைவால்-பருவத்தை /
காதலுக்கு காவு கொடுத்து காத்திருக்கேன்/

காதல் மடல்கண்டு வரவில்லையெனில் -சங்க /
காலத்து மடல்ஏறி உயிர் துறப்பேன் /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Sep-23, 6:24 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 108

மேலே