குறையிலா தேவன் கிறிஸ்து

சிலுவையில் தன்னுயிர் தந்திட்டான் செம்மல்
உலகமாந்தர் உய்ய உயர்கருணை வள்ளல்
இறைவனின் தூதனாய் இன்மொழி தந்தான்
குறையிலா தேவன் கிறிஸ்து

------இருவிகற்ப இன்னிசை வெண்பா

சிலுவையினில் தன்னுயிர் தந்திட்டான் செம்மல்
உலகமாந்தர் உய்திட உயர்கருணை வள்ளல்
நலம்தரும்நற் தூதனாய் நல்மொழிகள் தந்தான்
மலையமரும் தேவனாம் கிறிஸ்துவெனும் ஏசு

-----காய் விளம் காய் மா கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-23, 4:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே